கடவுள் பாதி மிருகம் பாதி


காதலர் இருவர் காரில் பயணிக்கிறார்கள். மூன்றாவதாக ஒருவன் அவர்களைத் தொடர்கிறான். அவன் யார், எதற்காகப் பின் தொடர்கிறான், காதலர்கள் என்ன ஆனார்கள் என்பதைத் திகில் கலந்து சொல்ல வருகிறது கடவுள் பாதி மிருகம் பாதி. நாயகனாக அபிஷேக்கும், நாயகியாக ஸ்வேதாவும் நடிக்கின்றனர். எழுதி இயக்குகிறார் ராஜ். இப்படம் பற்றி அவர், "இது ஒரு ரோட் சேஸ் திரில்லர். பெரிய அளவிலான விஷுவல் ட்ரீட்மெண்ட் இருக்கும். இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com