சிகாகோ: கானலஹரி
இந்த வருடம் மார்கழி மாதம் 28ம் நாள் (ஜனவரி 12, 2014) அன்று திருமதி. மரகதம் மணி அவர்களின் தலைமையில் கானலஹரி குழுவினர் சிகாகோவின் லெமான்ட் ஸ்ரீராமர் கோவிலில் 19 திருப்பாவைப் பாசுரங்களை சுமார் ஒரு மணி நேரம் பாடி மெய்மறக்கச் செய்தனர். மரகதம் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பாசுரங்களைப் பயிற்றுவித்துள்ளார்.

பாடியவர்கள்: அனிருத் பிரசன்னா, விஷ்ணுப்ரியா சிவா, லக்ஷ்மி சிவா, நேயா தணிகாசலம், நிவேதிதா பார்த்திபன், லஜ்வதி சுதாகர், காம்யா சுந்தரேசன், சுமேதா சுருபோட்லா, வானதி ராஜசிங்கம், முகுந்த் ராஜேஷ், கிருபா சுவாமி மற்றும் திருமதி. மாலதி தியாகராஜன், திரு. கூடலூர் குமார், திருமதி. சாரதா குமார். இவர்களுக்கு பக்கம் வாசித்தவர்கள்: புல்லாங்குழல் - திரு. மணி சுந்தரேசன்; மிருதங்கம் - மாஸ்டர். அர்ஜுன் ராமச்சந்திரன்.

தணிகாசலம்,
லெமான்ட், இல்லினாய்

© TamilOnline.com