GOD: பாகவத சப்தாஹம்
2013 செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 6 வரை, Global Organization for Divinity (GOD) அமைப்பின் மூலம் விரிகுடாப்பகுதியில் உள்ள சனாதன தர்ம கேந்திரத்தில், ஸ்ரீ முரளீதர சுவாமிகளின் அருளாசியுடன் ஏழு நாள் பாகவத சப்தாஹம் நடைபெற்றது. குருஜியின் பிரதான சீடரான ஸ்ரீ ராமானுஜம் இந்த சப்தாஹத்தை நடத்தினார். முதல் ஆறு நாட்கள் சுகமுனிவர் பரீட்சித்துக்குக் கூறிய பாகவத புராணம் கூறியபின், ஏழாவது நாள் ருக்மிணி கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் நிருத்யோல்லாசா நாட்டியப் பள்ளியின் நிறுவனரான திருமதி. இந்துமதி கணேஷ் மற்றும் அவரது மாணவியர் 'அந்தர்யாமி' என்ற நாட்டிய நிகழ்ச்சியை வழங்கினர். இதன்மூலம் திரட்டப்பட்ட நிதி தமிழ்நாட்டில் கோவிந்தபுரத்தில் உள்ள இலவச மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

மேலும் விபரங்களுக்கு:
www.godivinity.org, www.namadwaar.org

ஸ்ரீவித்யா ஸ்ரீகாந்த்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com