என் உயிர் என் கையில்


ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் படம் என் உயிர் என் கையில். தமிழ், ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தில் ஆறுமொழிகளிலும் நாயகனாக ஜெய் ஆகாஷே நடிக்கிறார். படத்தை ராகுல் சிங் காக்வால் இயக்குகிறார். எஸ்.எஸ்.குமரன் இசையமைக்கிறார். ஜெய் ஆகாஷ் டெல்லியில் பணிபுரியும் ஒரு ஆடிட்டர். அவரை அவரது எதிரிகள், ஒரு மரப்பெட்டியில் வைத்துப் பூட்டித் தண்ணீருக்குள் தள்ளிவிடுகிறார்கள். ஆகாஷிடம் இருப்பது செல்ஃபோனும் ஒரு சிகரெட் லைட்டரும்தான். அதை வைத்து அவர் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் கதை. அதை மிகவும் பரபரப்பாகப் படம் பிடித்திருக்கிறார்களாம்.

அரவிந்த்

© TamilOnline.com