BATM: கைப்பந்துப் போட்டி
அக்டோபர் 26, 2013 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் (BATM) கைப்பந்து விளையாட்டுப் போட்டிகளை ஃப்ரீமாண்ட் நகரின் எலிசபெத் ஏரிக்கரைப் பூங்காவில் நடத்தியது. இதன் வெவ்வேறு பிரிவுகளில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். வெற்றிபெற்ற அணிகளுக்குத் தமிழ்மன்றச் செயற்குழு பரிசுகளை வழங்கியது, இதில் பெண்கள் அணியும் அடங்கும். பூங்காவில் ஏராளமானோர் வந்திருந்து கரவொலி எழுப்பி அணிகளை உற்சாகப்படுத்தினர்.

இந்திரா தங்கசாமி

© TamilOnline.com