டாலஸ்: சூரசம்ஹாரம்
நவம்பர் 9, 2013 அன்று முருகப்பெருமானின் சூர சம்ஹார நிகழ்ச்சியும் தொடர்ந்து வள்ளி, தெய்வயானையுடன் திருக்கல்யாணமும் கோலாகலமாக டாலஸில் நடைபெற்றது. சுமார் இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய வம்சாவளியினரால் நிர்மாணிக்கபட்ட டி.எஃப்.டபுள்யூ மஹாலட்சுமி கோவிலில் விநாயகர், சிவபெருமான், வெங்கடாசலபதி, முருகன் உள்ளிட்ட இந்துக் கடவுளர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி அளவில் கணபதி பூஜையைத் தொடர்ந்து உற்சவர் ஊர்வலத்துடன் விழா ஆரம்பமானது.

பின்னர் முருகன் சம்ஹாரம் நடைபெற்றது. சூர சம்ஹாரம் முடிந்து வள்ளி தெய்வானை சகிதம் ஊர்வலமாக வந்த முருகன் ஆலயத்தில் எழுந்தருளினார். அங்கே மந்திரம் முழங்கத் திருக்கல்யாணம் இனிதே நடந்தது.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com