ஒரு ஊர்ல


'பருத்திவீரன்' வெங்கடேஷ் நாயகனாக நடிக்கும் படம் 'ஒரு ஊர்ல'. இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் இப்படத்திற்கு இசை, வேறு யார், இளையராஜாதான். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி வசந்தகுமார் இயக்குகிறார். படம் குறித்து அவர், ”இளையராஜா இசைப்புரட்சி செய்த 1980–90 கால கட்டங்களில் அவரது மெலடி பாட்டுகள் எப்படி இசைப்புரட்சி செய்தனவோ, அதுபோன்று 'ஒரு ஊர்ல' படத்தின் அனைத்து பாடல்களும் மெலடியாக 80-90 காலகட்டத்தை நினைவுக்குக் கொண்டுவரும். இதற்காக இளையராஜா இசையில் வேல்முருகன் பாடிய, 'இப்படியும் ஒருத்தன் உண்டு அத எப்படி நான் சொல்லுவது?' என்ற பாடல் பரபரப்பாக பேசப்படும். முழுப் படத்தையும் பார்த்துவிட்டு இளையராஜா இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்” என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com