அசத்தும் ராஜ்கிரண்
'ஆட்டோகிராப்' தந்த சேரனின் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது 'தவமாய் தவமிருந்து'. பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு வெளிவந்தாலும் 'தவமாய் தவமிருந்து' சேரனுக்கு மற்றொரு வெற்றிப் படம்.

இதுவரை தமிழ் சினிமாவில் பிள்ளைகளுக்காக 'அம்மா'க்கள் படும் கஷ்டங்களையும், தியாகங்களையும் சொல்லி வந்துள்ளது. முதன் முதலாக 'தவமாய்த் தவமிருந்து' படத்தின் மூலம் தந்தையின் சுமைகள், குழந்தைகள் வளர்ச்சிக்காக தந்தைபடும் பாடு போன்றவற்றை அழகாகச் சொல்லியிருக்கிறார் சேரன்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ராஜ்கிரண் இப்படத்தில் நடித்திருக்கிறார். அப்பாவாக அசத்துகிறார் மனிதர். இப்படத்தில் அவர் வரும் அத்தனை காட்சிகளும் அற்புதம்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com