எளியோர்க்கு உணவு
ஜூன் 14, 2013 அன்று பாரதி தமிழ்ச் சங்கமும் அன்னபூர்ணா அமைப்பும் இணைந்து சான் ஹோசேயில் உள்ள லோவ்ஸ் அண்ட் ஃபிஷஸ் அரங்கில் 300 பேருக்கு மேலான வீடற்ற ஏழைகளுக்குச் சுவையான இந்திய உணவு வகைகளை வழங்கினர். நிகழ்ச்சியை நித்யவதி சுந்தரேஷ், அருட்செல்வன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினார்கள். மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி சென்ற மூன்றாண்டுகளாக நடத்தப்படுகிறது. செப்டம்பர் 27, 2013 அன்று அடுத்த அன்னதானம் நடைபெறும்.
இதில் பங்கேற்று உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள:

அருட்செல்வன் - 916-316-6954
நித்யவதி - 510-857-3714
மின்னஞ்சல்: foodforguest@gmail.com

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com