பருவம் திரும்பியது
அவசரகால உதவிக்காய்
நான்கு பேர் சென்றதில்
ஒருவரின் இரத்தம் மட்டுமே
பொருந்தி இருக்க
மற்ற மூவரின் முகம்
வாட்டமெடுத்தது கண்டு
சொல்கிறாள் அவள்,
கவலைப்படாதீங்க மாமா
நான் வீட்டுக்கு வந்தப்புறம்
நாமெல்லாம் விளாடலாம்.
குழந்தையாயினர் மூவரும்!

பழமைபேசி,
சென்டர்வில், டென்னசி

© TamilOnline.com