ஹன்ட்ஸ்வில்: தமிழ்ப் புத்தாண்டு
ஏப்ரல் 27, 2013 அன்று அலபாமாவின் ஹன்ட்ஸ்வில் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழாவைக் கொண்டாடியது. மேடிசனில் உள்ள ஹெரிடேஜ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு வயதினரின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தமிழரின் பாரம்பரிய விருந்தும் அளிக்கப்பட்டது. விழாவில் இந்தியர்களும் அமெரிக்கர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். சங்க நிர்வாகிகள் தாரணி ரவீந்திரன், வைதேஹி ராஜன், கௌரி சுப்ரமணி, சொர்ணா பாலா, ஜெயந்தி ஸ்ரீகிஷன், அனு அருண் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தீபா ஆனந்த், லக்ஷ்மி சுப்ரமணி இருவரும் நிகழ்ச்சிகளை ருசிகரமாகத் தொகுத்து வழங்கினர்.

ஜெயப்ரியா ரமேஷ்,
ஹன்ட்ஸ்வில், அலபாமா.

© TamilOnline.com