மேற்கு கனெக்டிகட்: தியாகராஜ ஆராதனை
ஃபிப்ரவரி 17, 2013 அன்று, மேற்கு கனெக்டிகட் இந்திய சங்கமும், டேன்பரி பெருநகரத் தெலுங்கு சங்கமும் இணைந்து தியாகராஜ ஆராதனை விழாவை புரூக்ஃபீல்டில் நடத்தின. இந்த ஆண்டு சாந்தா சுப்ரமணியம் அவர்களின் வழிகாட்டுதலில் சிறுவயதினர் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது. கனெக்டிகட், மசாசூசெட்ஸ், நியூ யார்க் பகுதிகளிலிருந்து ஏராளமான அன்பர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சி விழியங்கள் காண: photos.fourcells.com/iawct2013.html

கைலாசநாதன்,
டேன்பரி

© TamilOnline.com