பிட்ஸ்பர்க்: இலக்கிய உரை
டிசம்பர் 15, 2012 அன்று பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் பெருமாள் கோவில் அரங்கில் 'சொல்லின் செல்வி' உமையாள் முத்து 'கவியரசு கண்ணதாசன்-மகாகவி பாரதி' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். கண்ணதாசன் திரைப்படப் பாடல்களில் புதைந்துள்ள உவமைகளை அழகாகச் சொன்னார். அவரது இருபொருள் கொண்ட பாடல்களில் பல எப்பொழுது எவர்குறித்து எழுதப்பட்டது எனவும் சொன்னார். பாரதியின் படைப்பிலிருந்து கண்ணதாசன் கையாண்ட பாடல்களைச் சொல்லி இரண்டு மணிநேரம் உற்சாகமாகப் பேசியும் கலந்துரையாடியும் அவையோரை மகிழ்வித்தார். வந்திருந்தோர் கேட்ட கேள்விகளுக்குச் சுவையாக விடையளித்தார்.

சாந்தா பாலு

© TamilOnline.com