கணிதப் புதிர்கள்
1. ஒரு பாட்டில் நெய்யை எடை போட்டபோது 1.5 கிலோ இருந்தது. அதில் பாதி காலி செய்த பிறகு எடை பார்த்தால் 800கிராம் ஆக இருந்தது. அப்படியானால் பாட்டிலின் எடை என்ன?

2. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

22, 21, 23, 22, 24, 23, ...

3. தந்தையின் வயதோடு மகனின் வயதைக் கூட்டினால் 66 வருகிறது. மகனின் வயது, தந்தை வயதின் தலைகீழ் எண்ணாக உள்ளது. தந்தை பணியாற்றும் பள்ளியிலேயே மகனும் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறான் என்றால் அவர்களது வயதுகள் என்ன?

4. ஒரு கூடையில் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் சேர்த்து மொத்தம் 60 பழங்கள் இருந்தன. ஆரஞ்சைவிட ஆப்பிள்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகம். மாம்பழங்களின் எண்ணிக்கை ஆரஞ்சைவிட 6 அதிகம் என்றால் பழங்களின் தனித்தனி எண்ணிக்கை என்ன?

5. 7/4, 13/8 ----- 49/32, 97/64. வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com