கோவலனின் காதலி


நன்றாகப் படிக்கும் ஒரு ஏழைப் பெண்ணை, வயதான பணக்காரன் ஒருவன், நான் உன்னைப் படிக்க வைக்கிறேன், அதற்கு பிரதிபலனாக நீ உன்னையே தர வேண்டும் என்று சொல்கிறான். அவள் அதற்குச் சம்மதித்தாளா அல்லது எதுவுமே வேண்டாம் என உதறிச் செல்கிறாளா என்பதைச் சொல்கிறது கோவலனின் காதலி. திலீப்குமார் நாயகனாக நடிக்க, கிரண்மை நாயகியாக நடிக்கிறார். நவ்நீத் கபூர், கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, சுமன் ஷெட்டி, கசன்கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களை நா. முத்துக்குமார், யுகபாரதி, புகழேந்தி எழுத, இசையமைக்கிறார் பாரதி. கே. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ. அர்ஜுனராஜா.

அரவிந்த்

© TamilOnline.com