சிவகார்த்திகேயனுடன் சிற்றுண்டி
புற்றுநோய் அறக்கட்டளை (கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஃபவுண்டேஷன்) நிதிக்காக நடத்தப்பட்ட 'சாரல்' நிகழ்ச்சிக்காக சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதிக்கு வந்திருந்த திரைப்பட/சின்னத்திரை நடிகர் சிவ கார்த்திகேயனுடன் திருப்பதி பீமாஸில் காலைச் சிற்றுண்டி அருந்தும் வாய்ப்பை அறக்கட்டளை, விரிகுடாப்பகுதித் தமிழ் மன்றம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. சற்றேறக்குறைய 150 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை சிவ கார்த்திகேயனின் பலகுரல் மிமிக்ரி கலகலக்கச் செய்தது. வந்திருந்தோர் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாகவும், சுவையாகவும் பதில் தந்தார். கையெழுத்து வேட்டைக்கு ஈடு கொடுத்ததோடு எல்லோருடனும் தனித்தனியாகப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். நிறைவைத் தந்தது திருப்பதி பீமாஸின் வகையான சிற்றுண்டி ஐட்டங்களா, சிவ கார்த்திகேயனின் வசீகரமான வருகையா என்று வியந்தபடியே திரும்பிய ரசிகர்களுக்கு, புற்றுநோயோடு போராடும் ஏழைகளுக்கு உதவினோம் என்ற நிறைவும் இருந்தது உண்மை.



© TamilOnline.com