பாண்டி ஒலிபெருக்கி நிலையம்


'மாயாண்டி குடும்பத்தார்', 'கோரிப்பாளையம்', 'முத்துக்கு முத்தாக' ஆகிய குடும்பப் படங்களைத் தந்த ராசு. மதுரவன் அடுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதித் தயாரித்து இயக்கும் படம் 'பாண்டி ஒலிபெருக்கி நிலையம்'. சபரிஷ் நாயகனாக நடிக்க, சுனேனா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, சிங்கப்புலி, எம்.எஸ். பாஸ்கர், சூரி, ராஜ்கபூர், வையாபுரி, யோகி தேவராஜ், சிசர் மனோகர், கருணாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். காதலும், நகைச்சுவையும் கலந்த படம் இது. இசை: கவி பெரியதம்பி.

அரவிந்த்

© TamilOnline.com