பார்வையற்றோருக்கு உதவ 'சரணாகதி'
செப்டம்பர் 8, 2012 அன்று மாலை 4.00 மணிக்கு மில்பிடாஸ் சாயி மந்திரில் (1221 California Circle, Milpitas, CA-95035) சுதா ராஜகோபாலனும் அவரது குழுவினரும்

'சரணாகதி' என்ற நிகழ்ச்சியை வழங்க உள்ளனர். இதன்மூலம் திரட்டப்படும் நிதி அக்செஸ் பிரெய்ல் (Access Braille) நிறுவனம், பார்வையற்றோருக்கான உதவிப் பணிகள் செய்வதற்குப்

பயன்படும்.

ஜூன் 21, 2012 அன்று இந்திய அரசாங்கம் இந்தியக் காப்புரிமைச் சட்டத்தில் ஓர் வரலாறு காணாத திருத்தத்தை அமல்படுத்தியது. இந்தச் சட்டத் திருத்தத்தின் விளைவாக, பார்வையற்ற மாணவர்கள்

எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் தாம் படிக்க ஏற்றபடி மாற்றிக்கொள்ள முடியும். இந்தியா முழுவதிலும் உள்ள லாப நோக்கற்ற நிறுவனங்கள் இந்தப் புத்தகங்களுக்கும் குறிப்பு நூல்களுக்கும்

ஏற்பட்டிருக்கும் தேவையை வேகமாகப் பூர்த்தி செய்ய முயல்கிறார்கள். அக்செஸ் பிரெயில் தொண்டர்கள் புத்தகங்களை வாங்கிப் பார்வையற்றோர் படிக்க ஏற்றபடி மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு: accessbraille.webs.com

விஜி திலீப்,
கூபர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com