BATM: 'சாக்லேட் கிருஷ்ணா'
மே 27, 2012 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றமும் (BATM) அய்யப்ப சமாஜமும் (AS) இணைந்து க்ரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தை சான் ரமோன் DVHS அரங்கில் வழங்கினர். விழாவின் தொடக்கத்தில் க்ரேஸி மோகன் தன் முப்பத்தி மூன்று ஆண்டு கால நாடக அனுபவத்தை நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டார். விழாவின் இடைவேளையில் மோகன் சேவதான் தீப்பந்தத்தை (Sevathon Torch) ஏற்றி அனைவரையும் ஜூலை 15 அன்று அதில் பங்கு பெறுமாறு அழைத்தார். நாடகத்தின் இறுதியில், தன் குழுவினரை அறிமுகம் செய்தார்.

தமிழ் மன்றத் தலைவர் பிரபு வெங்கடேஷ் சுப்பிரமணியன் வரவேற்புரையும், அய்யப்ப சமாஜத் தலைவர் பிரசாத் ராமகிருஷ்ணன் நன்றியுரையும் வழங்கினார்கள். 75க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உழைத்திருக்கிறார்கள்.

வெங்கடேஷ் பாபு,
சான் ரமோன்

© TamilOnline.com