மாசசூசெட்ஸ்: வைகாசி விசாகம்
ஜூன் 2, 2012 அன்று ஆஷ்லாந்திலுள்ள (மாசசூசெட்ஸ்) ஸ்ரீலக்ஷ்மி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சுப்பிரமணிய பூஜை, பூர்வாங்கபூஜை, மூலமந்திர ஹோமம், அபிஷேகம், அலங்காரம், கந்த சஷ்டி பாராயணம், ஆரத்தி எல்லாம் நடைபெற்றன. பால் காவடி எடுத்தனர். லெக்சிங்டன் சிசுபாரதி மாணவ மாணவியர் சாய் தர்ஷினி, ஹரி, தாரா, சஞ்சனா, சூர்யா, சாய் லாவண்யா, ஹம்சா, ஹரிணி ஆகியோர், ஆசிரியை திருமதி உமா நெல்லைப்பன் அமைத்த காவடி நடனத்தை முருகன் சன்னதியில் ஆடினர்.

ஆனந்திராஜா மாரிச்சாமி,
ஆஷ்லாந்து

© TamilOnline.com