நியூ ஜெர்சி: தமிழ் மெல்லிசை
ஜூன் 16, 2012 அன்று கிராஸ்ரோட்ஸ் நடுநிலைப்பள்ளி அரங்கத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு சமர்ப்பணமாக உற்சாகமான மெல்லிசைக் கச்சேரி ஒன்று நடந்தேறியது. சிம்ஃபனி இசைக்குழு வழங்கிய இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்கள் மட்டுமே பாடப்பட்டன. வசந்த் வசீகரன் பல வாத்தியங்களைப் பிசகில்லாமல் தனது கீபோர்டில் கொண்டு வந்தது வியக்க வைத்தது. 'ஜனனி ஜனனி' என்ற பாடலில் தொடங்கிப் பல பாடல்களை கிடார் வாசித்துக்கொண்டே பாடிய ரமணி பலருக்குக் கல்லூரி நினைவுகளைக் கொணர்ந்தார். சுரேஷ், பாபு, ஹரிணி, ப்ரியாவுடன் ஆகியோர் இளையராஜாவின் என்றும் இளமையான பாடல்களை விருந்தாக்கினர்.

வாஷிங்டன் பாலாஜி,
நியூ ஜெர்சி

© TamilOnline.com