அம்மாவின் கைபேசி
'அழகி', 'சொல்ல மறந்த கதை', 'பள்ளிக்கூடம்' போன்ற நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தந்த இயக்குநர் தங்கர் பச்சான் தனது 'களவாடிய பொழுதுகள்' திரைப்படத்தை அடுத்து இயக்க இருக்கும் படம் 'அம்மாவின் கைபேசி'. பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்க, இனியா நாயகியாக நடிக்கிறார். படத்தில் அவருக்குக் கல்லூரி மாணவி வேடம். இதே பெயரில் தங்கர்பச்சான் எழுதிய குறுநாவலே திரைக்கேற்ற சில மாற்றங்களுடன் படமாகிறது.



அரவிந்த்

© TamilOnline.com