'நலம்வாழ' நூல் வெளியீடு
தமிழ்நாடு அறக்கட்டளையின் 37 ஆவது மாநாடு ஹூஸ்டனில் மே கொண்டாடப்பட்டது. மாதந்தோறும் தென்றலில் டாக்டர். வரலட்சுமி அவர்கள் எழுதிவரும் 'நலம் வாழ' கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக இந்த விழாவில் வெளியிடப்பட்டது. இந்த நூலைச் சொல்லின் செல்வி உமையாள் முத்து அவர்கள் வெளியிட, முதல் பிரதியைப் பிரபல திரைப்பட இயக்குனர் SP. முத்துராமன் பெற்றுக்கொண்டார். நூலின் விலை பத்து டாலர். விற்பனையில் கிடைக்கும் பணம், இந்தியாவில் மனநிலை குன்றிய குழந்தைகளுக்கு சேவை செய்யும் 'அன்பாலயம்' என்ற பள்ளியைச் சென்றடையும். இதற்கு நூறு டாலருக்கு மேல் நன்கொடையாகக் கொடுப்பவர்களுக்கு அவர்களது விருப்பத்திற்கேற்ப வருடா வருடம் ஒருநாள் அந்தக் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்படும். குழந்தைகளின் பிறந்த நாள், பெரியவர்களின் திருமண நாள் போன்ற நாட்களைச் சமூகப் பிரக்ஞையுடன் கொண்டாட நினைப்பவர்கள் நிதியளிக்கலாம்.

விழாவுக்கு வந்திருந்த குழந்தைகள் இந்தத் திட்டம் பற்றி அறிந்தவுடன், பம்பரமாய்ச் சுழன்று நூற்றுக்கு மேலான பிரதிகளை விற்று நிதி சேர்த்த விதம் மனத்தை நெகிழச் செய்தது. புத்தகத்தை வாங்க விரும்புவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும். காசோலை TNF (Tamilnadu Foundation) என்ற பெயருக்கு எழுதவும்.

Dr.Varalakshmi Niranjan
695 Mountain Road
West Hartford- CT-06117

© TamilOnline.com