Perceptions 2012
மார்ச் 31, 2012 அன்று, சன்ஹிதி (Sanhiti) நடனக் குழுவும் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றமும் சேர்ந்து 'அறம் செய்' நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக 'Perceptions 2012' என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இது, பரதம், ஹிப்ஹாப், ஆஃப்ரோ, குத்து என்று பலவகை நடனங்களின் கற்பனைமிக்க கலவையாக இருந்தது. பிரியா ராமமூர்த்தி அவர்களின் வரவேற்புடன் நிகழ்ச்சி துவங்கியது. தமிழ் மன்றத் தலைவர் பாபு வெங்கடேஷ் சுப்ரமணியன், மே 27 அன்று நடக்க இருக்கும் க்ரேஸி மோகனின் 'சாக்லேட் கிருஷ்ணா' நாடகம் பற்றிப் பேசினார். நிதி உதவி அளித்த வணிக நிறுவனங்களின் மேலாளர்களை மேடைக்கு அழைத்து 'அறம் செய்' நிறுவனத்தினர் கௌரவித்தனர். சன்ஹிதி நிறுவனர்கள் பிரியா மற்றும் ரூபாவும் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் ரூபா நன்றி தெரிவிக்கையில், BATM உடன் மேலும் பல நிகழ்ச்சிகள் செய்ய எதிர்நோக்கி இருப்பதாகக் கூறினார்.

நிகழ்ச்சியின் மூலம் 25000 டாலர் நிதி திரட்டப்பட்டது. BATM சார்பில் நிதி உதவிக் காசோலைகளை தலைவர் பிரபு, செயலாளர் அன்பு ராஜன், பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் ரூபா சுரேஷ், நவீன் நாதன் முன்னிலையில் கொடுத்தனர்.

மேலும் விவரங்களுக்கும் நிகழ்ச்சி பற்றி அறியவும்: www.bayareatamilmandram.org

பி.வி.சு.,
கலிஃபோர்னியா

© TamilOnline.com