கென்டக்கி தமிழ்ச் சங்கம்: 'வெங்கடா3' நாடகம்
மே 12, 2012 அன்று, கென்டக்கி மாநிலம் லூயிவில்லில் ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் சிகாகோ திரிவேணி குழுவினர் இணைந்து 'வெங்கடா3' நாடகத்தை (விரிவான மதிப்புரைக்குப் பார்க்க: தென்றல் டிசம்பர் 2011) நடத்தினர். தமிழ் எழுத்து மற்றும் மனப்பாடப் பகுதி போட்டிகளில் பரிசுபெற்ற குழந்தைகளுக்கு ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் சாம் ரங்கசாமி சான்றிதழும், வெற்றிக் கோப்பையும் வழங்கினர்.

முன்னாள் சங்கச் செயற்குழு உறுப்பினர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. அன்றைய கலந்துரையாடல் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒய்.ஜி. மகேந்திரன் நகைச்சுவையோடு பதிலளித்தார். சங்கத் தலைவி விஜி அழகர், ஒய்.ஜி. மகேந்திராவுக்கு 'வாழ் நாள் சாதனையாளர் விருது' வழங்கினார்.

நிகழ்ச்சியை கீர்த்திவாசன், திலீப் குமார், யாழினி ஜெயப்ரகாஷ், அனிதா காந்தி, கல்பனா, தேவானந்த், ரேவதி குமார், வெண்ணிலா ஆறுமுகம், வித்யா ராம், வித்யா வெங்கட் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



© TamilOnline.com