தான்யா இசைப்பள்ளி ஆண்டு விழா
மே 19, 2012 அன்று ஷிர்டி சாயி பரிவார் , மில்பிடாஸ், கலிஃபோர்னியாவில் தான்யா சுப்ரமணியன் இசைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. 14 குழுக்களாகப் பிரிந்து கிருதிகளையும் கணேசர், அம்பாள், சிவன், ராமர், கிருஷ்ணர், ஹனுமான், முருகன் மீதான பாடல்களையும் பாடி மெய்மறக்கச் செய்தனர். குரு தான்யா குழந்தைகளுடன் பாடி வழிநடத்தினார். சுந்தரராஜன் (வயலின்), ஜி.டி. (மிருதங்கம்), அருண் ஆனந்த் (கீபோர்ட்), வாணி (ஜால்ரா) ஆகியவற்றை உடன் வாசித்தனர். நிகழ்ச்சியை பாலாஜி தொகுத்து வழங்கினார். மாணவர் சந்தீப் நன்றி உரையாற்றினார். குரு தான்யா மாணவர்களுக்கு நினைவுக் கோப்பைகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

ராஜேஸ்வரி ஜெயராமன்,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com