ஹன்ட்ஸ்வில்: தமிழ்ப் புத்தாண்டு
ஏப்ரல் 14, 2012 அன்று ஹன்ட்ஸ்வில் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழாவை ஹெரிடேஜ் தொடக்கப் பள்ளியில் கொண்டாடியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. விழாவில் தமிழர்களோடு இந்தியாவின் பல மாநிலத்தவர்களும் பாகுபடின்றிப் பங்கு கொண்டது உற்சாகமூட்டுவதாக இருந்தது. சிறார்களின் நடனம் மற்றும் நாடகம், பெரியவர்களின் நகைச்சுவை நாடகம், இளநங்கையரின் ஆட்டம் எனக் கலைநிகழ்ச்சிகள் அலுப்பைத் தராதவாறு அமைக்கப்பட்டிருந்த விதம் மிக அருமை. தவிர, அங்கே தீபா சுந்தரம் என்பவரின் பாரம்பரிய ஓவியங்கள் பார்வைக்கு விருந்தாக இருந்தன. தாரணி ரவீந்திரன், அனுராதா அருண் மற்றும் குழுவினர் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தகவல்: பிருந்தா ஐயர், ஹன்ட்ஸ்வில்,
புகைப்படம்: ஜெயஸ்ரீ ஸ்ரீனிவாசன், குக்வில்

© TamilOnline.com