S.R. ஃபைன் ஆர்ட்ஸ்: தொடக்க விழா
ஏப்ரல் 21, 2012 அன்று ஸ்ரீ ரங்க ராமானுஜ மஹா தேசிகன் ஃபைன் ஆர்ட்ஸ் (S.R. Fine Arts) என்ற புதிய சங்கீத சபை, 'டிவைன் கம்யூனிடி சென்டர்' அரங்கில் பிரபல வயலின் வித்வான் அனுராதா ஸ்ரீதர் (இயக்குனர், டிரினிடி சென்டர் ஃபார் மியூசிக்) அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. “வளரும் இந்திய இசைக் கலைஞர்களுக்கு ஒரு மேடையமைத்துத் தரும் நோக்கத்தோடு இந்தச் சபை தொடங்கப்பட்டுள்ளது” என்றார் தனது வரவேற்புரையில் இதனை நிறுவிய ஷோபனா சுஜித்குமார்.

சுலோகத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் அடுத்து டிரினிடி பள்ளி மாணவர்கள் புலியூர் துரைசாமி அய்யங்காரின் நாட்டை ராகக் கிருதியைப் பாடினர். தொடக்க உரையை அடுத்து, பி.எஸ். நாராயணசுவாமி அவர்களின் சீடர் அனிருத் வெங்கடேஷ் இசைக்கச்சேரி செய்தார். இதற்கு பாலசுப்ரமணியா (வயலின்), விக்னேஷ் வெங்கட்ராமன் (மிருதங்கம்), கணேஷ் ராம்நாராயணன் (கஞ்சிரா) ஆகியோர் பக்கம் வாசித்தனர்.

மேலும் தகவலுக்கு:
வலையகம்: www.srfinearts.info
தொலைபேசி: Shobana Sujitkumar - 408-569-0860
மின்னஞ்சல்: shobana@srfinearts.info

ஜெயஸ்ரீ ராஜா,
கேம்பெல், கலிஃபோர்னியா

© TamilOnline.com