பரம்பரை ஸங்கீதம்
நமது கலாசாரத்தின் முக்கிய அம்சங்களுள், பாரம்பரிய கர்னாடக இசை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். சூட்சுமமான இசைக்கலை குரு-சிஷ்ய பாரம்பரிய முறையிலே பயிற்றப்படவில்லையெனில், அதன் பாரம்பரிய நுணுக்கங்கள் தொய்வடைய வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லாமல், கலப்படம் சிறிதுமின்றிச் சுத்தமாக ஒரு பரம்பரை மரபு இன்று நம்மிடயே துலங்கி வருகிறது என்றால், அது 'காயக சிகாமணி' டாக்டர் முத்தையா பாகவதரின் சிஷ்ய மரபுதான். இதுவரை இசையுலகு அறிந்திராத அரிய பல தகவல்களோடு தன்னுடைய “பரம்பரை சங்கீதம்” என்னும் பேருரையின் மூலம் விரிகுடாப் பகுதி மக்களுக்கு இதைப்பற்றிப் பேச வருகிறார் 'இசைப்பேரொளி' நெய்வேலி சந்தானகோபாலன். இது செயல்முறை விளக்க (Lecdem) நிகழ்ச்சியாக இருக்கும்.

இடம்: ஸ்ரீ ஷிர்டி சாயி மந்திர், மில்பிடாஸ்
நாள்: மே 26, 2012; சனிக்கிழமை
நேரம்: மதியம் 2:00 முதல் 6:00 வரை
நுழைவுக்கட்டணம்: $15 (ஒரு நபருக்கு)
குடும்பமாக வந்தால், முன்பதிவு செய்வோருக்கு மட்டும் சலுகை உண்டு (2 பேருக்கு $25, 3 பேர் அதற்குமேல் கொண்ட ஒரே குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் $10)

தகவல் பெற:
பத்மா மோஹன் - 510-661-0709
ஹரி தேவநாத் - 408-841-9802
பிரசன்னா ரங்கநாதன் - 925-803-0180
வாசு நஞ்சன்கூட் - 650-868-0510



© TamilOnline.com