மஹாகாலேஷ்வர் கோவில்: ஷண்முக சிவாசாரியார் வருகை
2012 மே 5, 6 தேதிகளில் ஆசார்யா T.S. ஷண்முக சிவாசாரியார் வடகலிஃபோர்னியா வர உள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சைவ ஆகமத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபரான இவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சமஸ்க்ருத பண்டிதர். சென்னை காளிகாம்பாள் கோவிலின் பூசாரியான T.S. சாம்பமூர்த்தி சிவாசாரியாரின் கடைசி மகன். ஸ்ரீ மஹாகாலேஷ்வர் மந்திரின் ஸ்ரீ சாம்ப சதாசிவ வித்யா பீடத்தில் இரண்டு நாளும் மாலை 5.30 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார். 5ம் தேதி 'தேவி மற்றும் சிவ தத்துவம்', 6ம் தேதி 'இந்த நூற்றாண்டில் சடங்குகளின் அவசியம்' என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்துவார். மேலும் சனி, ஞாயிறு நாட்களில் ஸ்ரீ காளிகாம்பாள் மற்றும் ஸ்ரீ மஹாகாலேஷ்வர் ஆகியோரது காலை அபிஷேகம் 11 மணிக்கு இவரது தலைமையில் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு:
வலையகம்: srimahakalmandir.org
தொலைபேசி: 408-800-PUJA(7852)
மின்னஞ்சல்: info@srimahakalmandir.org



© TamilOnline.com