GATS: பொங்கல் விழா
பிப்ரவரி 11, 2012 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் (GATS) பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. 850 பேருக்குமேல் திரண்டு வந்த மக்கள் இது பொங்கல் விழாவா, காணும் பொங்கலா என்று பார்த்தோரை வியக்க வைத்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் பல கலை நிகழ்சிகள் ரசிக்கும் படியாக இருந்தன. பொங்கல் மற்றும் கோலப் போட்டியில் பலர் பங்கேற்றனர்.

விழாவை சுகர்ஹில் மேயர் கேரி பிர்கில் தலைமை ஏற்றுச் சிறப்புரை ஆற்றினார். சன் டி.வி. பட்டிமன்றப் புகழ் ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 'தமிழ்ப் படங்களால் தமிழ் மொழியும், பண்பாடும் வளர்கிறது, தேய்கிறது' என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தை ராஜா அவர்கள் நடுவராக இருந்து நடத்தி வைத்தார். மதிய உணவு வாழையிலையில் பரிமாறப்பட்டது. மாணவ, மாணவியர் இந்த விழாவில் சிறப்பாகத் தொண்டு புரிந்தனர். விவரங்களுக்கு: www.gatamilsangam.org

ராஜி முத்து,
தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்

© TamilOnline.com