ஏப்ரல் 2012: வாசகர் கடிதம்
பன்னாட்டு மகளிர் தினக் கொண்டாட்ட வாழ்த்துக்களுடன் ஆரம்பித்த மார்ச் மாதத் தென்றல் இதழ் மணக்க மணக்க மலர்ந்துள்ளது. எல்லா வயதினரும் ஆவலுடன் எதிர்பார்த்து விரும்பிப் படிக்கக் கூடியதாக இருப்பதே தென்றலின் தனிச் சிறப்பு. இந்த இதழின் மேலட்டையில் அருண் அழகப்பன், கமலா தேவி அரவிந்தன், சாருலதா மணி, பிரகதி, விலாசினியின் படங்கள் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உலகம் முழுதும் பார்த்து ரசிக்கும் விஜய் டி.வி.யின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடி, வளைகுடாப் பகுதிக்குப் புகழ் சேர்த்துக் கொண்டிருக்கும் இளைய தலைமுறை பிரகதியைத் தென்றல் அட்டையில் பார்த்ததும் மிகவும் ஆனந்தமடைந்தேன்.

நாடு விட்டு நாடு சென்று சுற்றுப்புறச் சூழலுக்குத் தகுந்தவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டு புதிய நண்பர்களுக்கு நடுவில் உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வரும் பிரகதி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com