நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்


வித்தியாசமான தலைப்புகளை படத்த்திற்குச் சூட்டுவது வீணை பாலசந்தர் காலத்திலிருந்தே தொடர்ந்து நடைபெறுவதுதான். அந்த வகையில் புதிதாக உருவாகி வரும் படம் "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்." விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, காயத்ரி என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பகவதிப் பெருமாள், ராஜ்குமார், விக்னேஷ்வரன் என மூன்று புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். நான்கு நண்பர்களுக்கு இடையே நடந்த உண்மைச் சம்பவம்தான் படத்தின் கதையாம். எழுதி இயக்குபவர் புதிய இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

அரவிந்த்

© TamilOnline.com