ஏப்ரல் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

சென்னையில் நடைபெற்ற புதிர்வாசிகள் சந்திப்பில், நேரிலும், இணையவழியும் சந்திந்த்தவர்க்கும், சில தொழில்நுட்பக் கோளாறுகளால் தயாராக இருந்தும் சந்திக்க முடியாதவர்க்கும் நன்றி. மூன்றாண்டுகள் மாதந்தோறும் புதிர் அளித்துவந்த (அபாகு) பார்த்தசாரதி இம்முறையளித்த பெரிய புதிரை முயலுங்கள். மேலும் பலரும் புதிராக்க முயன்று புதிருலகை விரிக்கும்படி அழைக்கிறேன் அதற்கு இனி சந்திப்புகள் நடைபெறும். (அப்படியே விடையையும் கண்டு பிடித்து எழுதுங்கள்!)
*****


குறுக்காக
3. மரத்தாலான ஓர் இருப்பிடம் (3)
5. பெரிதாகி வந்து கள்ளர் குடியை அழித்து நுழைந்தனர் (5)
6. அடை இல்லை நேரெதிர் (2)
7. நீதிக்கு முன்னேயிருப்பவரைத் தொடர்ந்தவர் வராமல் ஒழித்துவிடு (3)
8. அருள்மிகு தியானகுருவிடம் தேவைக்கதிகமாக இருப்பது (5)
11. தூங்காதே தோழி பாதி விருத்தி கலையும் (5)
12. கரையான் அரிக்காததைத் தடு (3)
14. உரக்கச் சொல்லிக் கூந்தலையும் விடுதலையும் பெறலாம் (2)
16. இவன் தொழிலால் இடையனுக்குக் காக்கும்படி நேரிட்டது (5)
17. தலை போகும்படி விவாதம் செய்து ஏச்சுதான் கிடைக்கும் (3)

நெடுக்காக
1. கூரைச் சேவலுக்கு ஜோடியா? கொஞ்சம் கீழிருந்து ஒலியெழுப்பும் (6)
2. முடிவான விடை (3)
3. பொழுதுக்கு மாறும் அரசியல் கட்சிகளின் அமைப்பு (5)
4. ஐங்கரனின் ஐந்தாம் கரத்தில் கரமில்லை என்று போற்று (2)
9. களிறுக்கந்தநாள் இளவயதானது (6)
10. பள்ளத்தில் மூன்றாம் கடுகம் குறைய விலையைக் கண்டுபிடி (5)
13. கார்த்திகைப் பொரி வடிவமாய் மூடு (3)
15. எதிரான பதிவில் வாயிலிருப்பதைப் பிடுங்க வரைமுறை (2)

வாஞ்சிநாதன்

மார்ச் 2012 விடைகள்

© TamilOnline.com