NETS: பொங்கல் விழா:
பிப்ரவரி 4, 2012 அன்று நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் பொங்கல் விழாவை லிட்டில்டனில் (மாஸசூசட்ஸ்) கொண்டாடியது. சிறுவர் சிறுமியர் இயல், இசை, நாடகம் என்று பங்கு கொண்டு சிறப்பித்தனர். சிசு பாரதி, லெக்சிங்டன், மாஸசூசட்ஸ் மாணவ மாணவியர் பங்கேற்றனர். சிசு பாரதியின் தமிழ் ஆசிரியர் உமா நெல்லையப்பன், எழுதிய தெனாலிராமன் என்ற நகைச்சுவை நாடகத்தில் ஹரிணி மோகன், ஹரி சண்முகம், ஹம்சா சண்முகம், கேசவ் கௌதமன், சஞ்சனா சங்கர், சூர்யா மெய்யப்பன், சாய் தர்ஷிணி, சாய் லாவண்யா லக்ஷ்மி நாராயண், அமியா சுப்ரமணியன் ஆகியோர் சிறப்பாக நடித்து அரங்கேற்றினர். மேலும், சிலப்பதிகாரம் என்ற நாடகத்தையும் உமா நெல்லையப்பன் அரங்கேற்றியது குறிப்பிடத் தக்கது.

ஆனந்தி ராஜமாரிசாமி,
ஆர்லிங்டன்

© TamilOnline.com