லெமான்ட் கோவில்: தைப்பூசம்
பிப்ரவரி 11, 2012 அன்று லெமான்ட் முருகன் சந்நிதியில் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்றை சிறப்பு அலங்காரத்தில் அறுநூறுக்கும் மேற்பட்ட ஆப்பிள் பழங்கள் மாலையாகக் கோக்கப்பட்டு அணிவிக்கப்பட்டிருந்தது. விதவிதமான வண்ணங்களிலும் வடிவங்களிலும் பழங்களைத் தெரிந்தெடுத்து, நேர்த்தியாக அலங்கரித்து அந்த அழகனுக்கே அழகேற்றிய பெருமை அனைவரின் கண்ணுக்கும் விருந்தாக அமைந்தது. வெங்கடேஸ்வர குருக்களின் மேற்பார்வையில் தன்னார்வத் தொண்டர்களின் உதவியோடு விழா இனிதே நடைபெற்றது.

செய்திகுறிப்பிலிருந்து

© TamilOnline.com