பத்தாயிரம் கோடி


பிரபல படஅதிபரும், இயக்குநரும், எழுத்தாளருமான முக்தா சீனிவாசனின் மகன் முக்தா சீனிவாசன் சுந்தர் புதிதாக இயக்கும் திரைப்படம் 'பத்தாயிரம் கோடி'. புதுமுகம் துருவ் நாயகனாக நடிக்க, ஷா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கோகுல், செல்முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பல முக்கியப் புள்ளிகளுக்கு அரசியல் தரகராகச் செயல்பட்ட நீரா ராடியாவை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறதாகச் சொல்கிறது கோலிவுட் பட்சி. இந்தப் படத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர், வேறென்ன, நீரா ராடியாவே தான்!

அரவிந்த்

© TamilOnline.com