கணிதப் புதிர்கள்
1) வரிசையில் அடுத்து வர வேண்டியது என்ன, ஏன்?
  1
1 1
2 1
1 2 1 1
1 1 1 2 2 1
? ? ? ? ? ?


2) கீதாவும் ராதாவும் ஒரே தாய்க்கு ஒரே வருடத்தில் ஒரே மாதத்தில் ஒரே நாளில் பிறந்தவர்கள். ஆனால் அவர்கள் இரட்டைப் பிறவிகள் அல்ல. இது எப்படி?

3) ஒரு பண்ணையில் சில பறவைகளும் மிருகங்களும் இருந்தன. அவற்றின் தலைகளின் மொத்த எண்ணிக்கை 54. கால்களின் எண்ணிக்கை 140. அப்படியென்றால் மிருகங்கள் எத்தனை, பறவைகள் எத்தனை?

4) ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்களைப் பயன்படுத்தி கூட்டியோ, கழித்தோ விடை நூறு வருமாறுச் செய்ய வேண்டும். முடியுமா?

5) ராமு மற்றும் செல்வத்தின் தற்போதைய வயது விகிதம் 5 : 4. மூன்று வருடங்கள் கழித்து அவர்களின் வயது விகிதம் 11 : 9 ஆக இருக்கிறது என்றால் அவர்களது தற்போதைய வயது என்ன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com