LA மலிபு கோவில்: இன்னிசைப் பெருவிழா
ஜனவரி 21, 2012 அன்று, லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் 8வது வருடாந்திர தியாகராஜர் ஆராதனை நடந்தது. காலையில் அர்ச்சகர் பிரசாத் ஸ்ரீராமருக்கு விசேஷ அர்ச்சனை, தீபாராதனை செய்தார். குளோரியா அவர்கள் வரவேற்புரை

கூற, கலிபோர்னியா லாஸ் ஏஞ்சலஸ் இசை குருமார்ளும் சீடர்களும் தியாகராஜரின் ஸ்ரீ கணபதினி கிருதியைப் பாடி, பின்னர் பஞ்சரத்னக் கிருதிகளை இசைத்தனர். இசை ஆசிரியர்கள் கானசரஸ்வதி, கல்யாணி சதானந்தம், கல்யாணி

வீரராகவன், பத்மாகுட்டி, சுபா நாராயணன், சுனந்தா சந்த்ரமெளளி, சங்கரி செந்தில்குமார், பாபு பரமேஸ்வரன், இந்து நாகராஜன், ஆனந்த் சந்தானம், K.R.சுப்ரமணியம், வஸந்தா பட்சு, டெல்லி சுந்தரராஜன் ஆகியோர் தமது

சீடர்களுடன் விழாவில் பங்கேற்று, தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷதர், சியாமா சாஸ்த்ரி, ஸ்வாதித் திருநாள், புரந்தரதாஸர், அன்னமாசாரியார், பாபநாசம் சிவன், பாரதியார், உட்படப் பற்பலரின் சாகித்தியங்களைப் பாடி பக்தியில்

திளைக்கச் செய்தனர். பாபு பரமேஸ்வரன் சீடர்கள் கீபோர்ட்; வசந்தாபட்சு-கீதா ராகவன் வீணை; கோபால், ஆஷிகா, ஆஷ்ரிதா புல்லாங்குழல்; சக்தி சுந்தர் பேஸ் கிளாரினட் ஆகியோர் வாத்திய விருந்து வழங்கினர்.

சங்கீதா, விஜயகிருஷ்ணன், ஆனந்த் சந்தானம், இந்து நாகராஜன், கானசரஸ்வதி, சங்கீதா ஆகியோரின் இசையும் மெய்மறக்கச் செய்தது. ஸ்ரீனிவாசன், நீலகண்ட குண்டப்பா, சரண், ராஜீவ்ராவ் மிருதங்கம் மற்றும் கடம் வாசித்தனர்.

ரவீந்திரன் பங்கேற்றவர்களைப் பாராட்டி, கலைஞர்களுக்குப் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். அருண் சங்கரநாராயணன் நன்றி உரை கூற, மங்களத்துடன் பெருவிழா முடிவடைந்தது.

தமிழ்ச்செல்வி

© TamilOnline.com