மனம் கொத்திப் பறவை


துள்ளாத மனமும் துள்ளும் என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் எழில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் படம் மனம் கொத்திப் பறவை. சின்னத்திரைத் தொகுப்பாளர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, நாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார். "இது ஒரு வித்தியாசமான காதல் கதை. கதாநாயகி உட்பட நிறையப் புதுமுகங்களை இப்படத்தில் அறிமுகம் செய்கிறேன்" என்கிறார் எழில்.

அரவிந்த்

© TamilOnline.com