பிரகாஷ்ராஜ் நடிப்பில் கள்ளபார்ட்
தான் தயாரித்த 'மொழி' வெற்றிபெற்றதை அடுத்து உற்சாகத்துடன் அடுத்த படத் தயாரிப்பில் இறங்கிவிட்டார் பிரகாஷ்ராஜ்.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய 'உதயனானு தாரம்' என்ற படத்தை தமிழில் 'கள்ளபார்ட்' என்ற பெயரில் தயாரிக்கவிருக்கிறார்.

படத்தில் இரண்டு நாயகர்கள், இரண்டு நாயகிகள். பிரகாஷ்ராஜ், பிருத்திவிராஜ் ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்க, அசின் மற்றும் பாவனா நாயகியராக நடிக்கவிருக்கிறார்கள்.

'கள்ளபார்ட்' குடும்பத்தில் உள்ள அனைத்து அங்கத்தினர்களுக்கும் பிடிக்கும் விதத்தில் இருக்கும் என்கிறார் பிரகாஷ்ராஜ்

கேடிஸ்ரீ

© TamilOnline.com