அன்றும், இன்றும்!
அன்று,
நாலும் மூணும் ஏழு என்று
ஒருமுறை சொன்னால்
புரிந்து கொள்ளாத உன் முதுகில்
கைபதித்த எனக்கு
அதன் வலி
அப்பொழுது தெரியவில்லை

ஆனால் இன்று,
கணிப்பொறியை இயக்க
ஒருமுறை சொல்லித்தந்த நீ
புரிந்துகொள்ளாத என்னைப் பார்த்த
பார்வை தந்த வலியில்,
அது புரிந்தது.

சுதா சந்தானம்,
மௌன்டன்வியூ, கலிஃபோர்னியா

© TamilOnline.com