முதியோர் வசிக்க முத்தான வீடுகள்
அனன்யா ஷெல்டர்ஸ் பிரைவேட் நிறுவனத்தார் NanaNaniHomes என்னும் பெயரில் முதியோருக்கான புதிய ஓய்வு இல்லத்தை கோவை அருகேயுள்ள வடவள்ளியில் அமைந்துள்ளனர்.

இந்த இரண்டாம் கட்ட சூப்பர் வசதி வசிப்பிடங்கள் 3 ஏக்கர் பரப்பில், 3 பிளாக் மற்றும் 95 ப்ளாட்களாக (8 தனி வீடுகள், 87 வரிசை வீடுகள்) இரண்டு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே 24 மணி நேர தடையில்லா மின்சாரம், குடிநீர், கேபிள் டி.வி., மருத்துவ வசதி, நடைபாதை, பூங்கா, 24 மணிநேர பணியாளர் சேவை என்று சொர்க்கம்தான் போங்க. ஆயுர்வேத மருத்துவர், காரியம் செய்ய சாஸ்திரிகள், ஏன், முடி திருத்துநர்கூடத்தான் வளாகத்திலேயே உள்ளனர். பொழுது போக்க கிளப் ஹவுஸ், யோகா தியான அரங்கம், விளையாட்டரங்கம், ஓய்வறை, நூலகம் எல்லாம் உண்டு. தனி வீடு அல்லது உதவியோடு வசிக்க (Assisted Living) என்று சாய்ஸ் உண்டு. மொத்தம் 175 வீடுகள் இங்கு அமைக்கப்பட உள்ளன. இதற்கான புக்கிங் தொடங்கிவிட்டது.

நானா நானி ஹோம்ஸின் முதல் கட்டத்தை நவம்பர் 30 நவம்பர் அன்று ஆர்ஷ வித்யா குருகுலத்தின் நிறுவனரான பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார். வான ப்ரஸ்தா மற்றும் தியான ப்ரஸ்தாவின் நிறுவனர் ராமசாமி தம்பதிகள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர். அனன்யாவின் இயக்குநர் உமா யுவராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இணையதளம்: www.nanananihomes.com மற்றும் www.ananyashelters.com
மின்னஞ்சல்: ananyahomes@gmail.com

தொடர்பு முகவரி: Ananya Shelters (p) Ltd., #1,Ananyagardens KKR Nagar, Mouthi Hospital road, Vadavalli, Coimbatore-641041.

Phone:+91 0422-2425042/2427272

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com