கேட்க ஒரு தென்றல்!
தென்றல் அச்சுப் பிரதியை அல்லது இணைய தளத்தில் வாசிக்கிறீர்களா? கண்ணை மூடிக்கொண்டு கேட்டும் சுவைக்கலாம். ஆம், சென்ற ஒரு வருட காலமாகத் தென்றலின் எல்லாப் பகுதிகளும் ஆடியோ வடிவத்தில் கிடைக்கின்றன. 'தென்றல் பேசுகிறது', 'அன்புள்ள சிநேகிதியே' என்று சிலவற்றை மட்டும் முதலில் ஒலி வடிவில் கொடுத்தோம். எமது ஆசிரியர் குழுவிலுள்ள திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் கடும் உழைப்பில் இப்போது 600 பதிவுகளுக்கு மேல் கேட்கக் கிடைக்கின்றன.

நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அச்சிதழ் வராவிட்டாலும், உங்கள் ஸ்மார்ட் ஃபோன், டேப்லட் என்று எதிலும் நீங்கள் கேட்டு ரசிக்கலாம், பயன் பெறலாம்.

தமிழ் நாட்டின் சில பிரபல செய்தித் தாள்களும் சஞ்சிகைகளும் கூட அண்மையில் ஒலி வடிவில் தரத் தொடங்கியிருக்கிறார்கள். வாசகர் வசதி கருதி நாம் இதை முன்னதாகவே தரத் தொடங்கினோம் என்பதில் பெருமை கொள்கிறோம்.



© TamilOnline.com