கள்ளத் துப்பாக்கி
'விருமாண்டி' படத்தில் பணிபுரிந்த லோகியாஷ் எழுதி இயக்கும் படம் 'கள்ளத் துப்பாக்கி'. புரட்சியாளர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக ஐந்து சிறுவர்களின் கையில் கிடைக்கிறது. அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த துப்பாக்கியைத் தேடும் கும்பலிடம் இருந்து தப்பித்தார்களா? (ஐயோ இப்பவே டென்ஷனா இருக்கே!) சினிமாவுக்கு தொடர்பே இல்லாத ஐந்து சிறுவர்களுடன் நீமா நாயகியாக அறிமுகமாகிறார். விறுவிறுப்பான இந்தப் படத்தில் கோபத்தைக் கண்ட்ரோல் பண்ற சக்தியில்லாத ஆசிரியர்களால், சிறந்த மாணவர்களை உருவாக்க முடியாது என்ற கருத்தும் மையமாக இருக்கும்" என்கிறார் இயக்குநர் லோகியாஷ்.

அரவிந்த்

© TamilOnline.com