காந்திஜியின் நகைச்சுவை
காந்திஜியிடம் நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. 1931ல் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் லண்டனுக்குச் சென்றிருந்தார். ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபின் பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோது, பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒருவர், "இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே, உங்களுக்குக் குளிரவில்லையா?" என்று கிண்டலாகக் கேட்டார்.

உடனே காந்திஜி அதற்கு, "இல்லை. இல்லை. எங்கள் இருவருக்கும் போதுமான ஆடைகளைத்தான் உங்கள் மன்னரே அணிந்து கொண்டிருந்தாரே!" என்றார் புன்னகையுடன்.



© TamilOnline.com