செப்டம்பர் 2011: ஜோக்ஸ்
நிருபர்: நீங்க சிறுகதை எழுத்தாளர். ஆனா டிவி சீரியலுக்கு ரெண்டு வருஷமா தொடர்கதை எழுதிக்கிட்டு வரீங்களே, எப்படி?
எழுத்தாளர்: நான் எழுதின ரெண்டு பக்க சிறுகதையைத்தான் டைரக்டர் ரெண்டு வருஷமா இழுத்துக்கிட்டிருக்காரு!

*****


நீதிபதி: திருடறதையும் திருடிட்டு திருடலேன்னு சொல்றயாமே?
குற்றவாளி: திருடாமலே திருடலேன்னு சொல்ல சங்கடமா இருக்குது ஐயா!

*****


நண்பர்: உங்க குழந்தைகளுக்குத் தமிழ் கத்துக்குடுக்கறேன்னு உங்கம்மா தொடங்கினாங்களே, என்ன ஆச்சு?
மற்றவர்: அதுவா, எங்கம்மா இப்ப சூப்பரா இங்கிலீஷ் பேசறாங்க.

*****


இன்ஸ்பெக்டர்: இறந்துபோன உங்க மாமியாருக்கு நீச்சல் தெரியாதுன்னு உங்களுக்கு எப்போ தெரியும்?
மருமகள்: தள்ளி விடுறதுக்கு முன்னாடிதான்!

தமிழ்மேகம்,
மிச்சிகன்

© TamilOnline.com