தெரியுமா?: சாக்லேட் கிருஷ்ணா - 400வது ஷோ
கிரேஸி மோகனின் நகைச்சுவை நாடகமான 'சாக்லேட் கிருஷ்ணா'வின் 400வது காட்சி, சமீபத்தில் சென்னை நாரதகான சபாவில் நடந்தது. பாலசந்தர், கமல், கு. ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். சாக்லேட் கம்பெனியில் வேலை செய்யும் மாதுவுக்குப் பல பிரச்னைகள். அவனுடைய சாக்லேட் எதுவுமே விற்பதில்லை. வேலையில் சிக்கல். அவனுக்கு உதவக் கிருஷ்ணர் வருகிறார், அதுவும் மீசையோடும், மூக்குக் கண்ணாடியோடும். அவர் உண்மையில் மாதுவுக்கு உதவுவதற்காக வரவில்லை. வைகுந்தத்தில் பாமா, ருக்மிணி, ராதை தொல்லைகளிலிருந்து தப்பிக்க பூமிக்கு வந்திருக்கிறாராம். இங்கே மாதுவைச் சந்திக்கிறார். அதன்பின் நடக்கும் கலகல சம்பவங்களின் தொகுப்புதான் சாக்லேட் கிருஷ்ணா. நடுநடுவில் குழந்தைகளைக் கவரக்கூடிய சின்னச் சின்ன மேஜிக்குகள் வேறு. 500வது காட்சி ஐரோப்பாவிலா, அமெரிக்காவிலா?



© TamilOnline.com