ஒரு மழை நான்கு சாரல்


சுதர்ஷன், கணா, அனகா, ரம்யா ஆகியோர் நாயக, நாயகியராக அறிமுகமாகும் படம் 'ஒரு மழை நான்கு சாரல்'. கதை, திரைக்கதை, எழுதி இயக்குநராக அறிமுகமாகும் ஆனந்த், "மனித வாழ்க்கையில் சிலருக்கு சோகம், சிலருக்கு சந்தோஷம், சிலருக்கோ இரண்டுக்கும் இடையே நடக்கும் போராட்டம். இதுதான் வாழ்வு என யாருக்கும் நிரந்தரம் இல்லை. இதை மையமாக வைத்து நகைச்சுவை கலந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்" என்கிறார். சிங்கமுத்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் பாடல்களை எழுத, மேஹன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

அரவிந்த்

© TamilOnline.com