ஜெயமோகன் கைவண்ணத்தில் பேரன்பு


நடிகர் கௌதம் இயக்கி நடிக்கும் படம் பேரன்பு. இப்படத்தின் கதை தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், காஷ்மீர் ஆகிய மூன்று மாநிலங்களில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. சந்தானம், கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வசனத்தை ஜெயமோகன் எழுதுகிறார். "உணவு, உடை, வாழ்விடம் இதையெல்லாம் விட இந்த உலகத்தில் அன்புதான் பெரியது என சொல்லுவார்கள். அதை மையமாக வைத்துதான் கதைக் கருவை உருவாக்கியிருக்கிறேன். வாழ்வின் மகத்தான, நெகிழ்வான நிகழ்வுகளை உள்ளடக்கிய படைப்பாக இது இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரமும் நிஜ வாழ்வை ஒட்டியதாக இருக்கும்." என்கிறார் கௌதம்.

அரவிந்த்

© TamilOnline.com